poet vairamuthu gets into controversy for talking about lord ram
வைரமுத்துஎக்ஸ் தளம்

ராமர் பற்றிய பேச்சு.. சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து.. களத்தில் குதித்த பாஜக!

பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இலக்கிய நிகழ்வு ஒன்றில், ராமர் குறித்து ஆற்றிய உரை புதிய அரசியல் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
Published on

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து கம்ப ராமாயணத்தை மேற்கொள்காட்டி பேசினார். அப்போது பேசிய அவர், “மதிமயக்கத்தால், மனப்பிறழ்ச்சியால் ஒருவன் செய்யும் செயல் குற்றத்தில் சேராது என்பது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 84ஆம் பிரிவு. அந்த வகையில், மதி மாறுபாட்டால் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றது குற்றன்று என்று கம்பன் ராமனை மீட்டெடுக்கிறான். கம்பனால் மன்னிக்கப்பட்ட ராமன் மனிதனாகிறான்; கம்பன் கடவுளாகிறான்” எனப் பேசியிருந்தார். அதாவது, கடவுள் ராமர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்றும் புத்தி சுவாதீனம் இல்லாதவர் குற்றம் செய்தால் தண்டனை குற்றமாகாது என்பது இந்திய தண்டனை சட்டம் எனவும் அவர் பேசிய கருத்து இந்து மத வழிபாட்டாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராமர் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. முதல்வர் வைரமுத்துவின் கருத்துகளை முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியதாக என்.டி.டிவி. ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் வைரமுத்துவைக் கடுமையாக விமர்சித்திருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

poet vairamuthu gets into controversy for talking about lord ram
ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; கீழடி விவகாரம்... வைரமுத்து போட்ட பதிவு!

அதேநேரத்தில், வைரமுத்துவுக்கு நெருக்கமானவர்கள், இந்த சர்ச்சையை நிராகரித்து, இது அவரது வார்த்தைகளை வேண்டுமென்றே திரித்துக் கூறியதாகத் தெரிவித்திருப்பதாக அது மேலும் ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. "இது ஒரு இலக்கிய விளக்கம், மத சொற்பொழிவு அல்லது அரசியல் பேச்சு அல்ல. வைரமுத்துவுக்கு எதிரான மனநிலையுடன், அவர் சொல்லும் அனைத்தும் திட்டப்படுகின்றன. இந்தக் கருத்துகள் கம்பனின் கவிதை மேதைமையை முன்னிலைப்படுத்தவும், ராமரை மனிதாபிமானப்படுத்தவும், மத நம்பிக்கைகளை அவமதிக்கவும் அல்ல. ராமர் வாலியை மறைந்திருந்து கொன்ற அத்தியாயம் குறித்த இலக்கிய விமர்சனத்தைத்தான் அவர் குறிப்பிட்டார். சீதையை இழந்த பிறகு ராமரின் மனநிலையின் பின்னணியில் அதை விளக்குவதன் மூலம், வைரமுத்து ராமருக்கு அதிக மகிமையைக் கொண்டு வந்துள்ளார்” என அவரது வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

poet vairamuthu gets into controversy for talking about lord ram
வைரமுத்துஎக்ஸ் தளம்

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு ஆண்டாள் குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, பாடகி சின்மயி பாலியல் தொடர்பான புகாரிலும் அவர் சிக்கியிருந்தார்.

poet vairamuthu gets into controversy for talking about lord ram
“நான் சர்ச்சைக்கு பிறந்தவனில்லை.. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன” - வைரமுத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com