#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல்
#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல் pt web

“இயந்திரங்களை நம்பி மட்டுமே ஒரு கட்சி இருக்குமென்றால் அது பாஜகதான்”- செல்வப்பெருந்தகை

”ஒரு இளைஞர் தன் வாக்கினை செலுத்தும்போது 8 முறை பாஜகவிற்கு வாக்களிக்கிறார் என்றால் அது எப்படி சாத்தியம். தேர்தல் ஆணையம் நியாயமான முறையில், கண்ணியமான முறையில் தேர்தலை நடத்துகிறதா என்பதற்கு இதுவே ஒரு சாட்சி” - செல்வப்பெருந்தகை

உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத் மக்களவை தொகுதியில், முகேஷ் ராஜ்புத் என்பவர் பாஜக வேட்பாளராக களம்கண்டுள்ளார். அந்தத் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த இளைஞர், தாமரைச் சின்னத்துக்கு 8 முறை வாக்களித்த காட்சி வெளியாகி இருக்கிறது. சர்வசாதாரணமாக, எந்தவித அச்சமும் இன்றி விரல்களை விட்டு எண்ணி எண்ணி காட்டும் இளைஞர், 8 முறை தாமரை சின்னத்தில் வாக்களித்துள்ளார்.

வாக்களித்த இளைஞர்
வாக்களித்த இளைஞர்pt web

ஒவ்வொரு முறையும் தெள்ளத் தெளிவாக பாஜக சின்னத்துக்கு எதிரே உள்ள வாக்குப் பதிவுக்கான விளக்கு ஒளிர்கிறது. இந்தக் காட்சியை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இது தவறு என தெரிந்தால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அங்கிருந்த பூத் கமிட்டி, உண்மையில் கொள்ளை கமிட்டிதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதே காட்சியை பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷன் சார், 8 முறை வாக்களிக்கும் பையனை பார் என்றும், இப்போதாவது விழித்தெழு என்றும் கோரியுள்ளது.

#BREAKING | பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த நபர் - வீடியோ வைரல்
உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர்! நான்கு நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது எப்படி?

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு இளைஞர் தன் வாக்கினை செலுத்தும்போது 8 முறை பாஜகவிற்கு வாக்களிக்கிறார் என்றால் அது எப்படி சாத்தியம். தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் கண்ணியமான முறையில் தேர்தலை நடத்துகிறதா என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

Selvaperunthagai
Selvaperunthagaipt

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஜனநாயக மாண்பை தேர்தல் ஆணையம் சரியாக பாதுகாக்கிறதா நடமுறைபடுத்துகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகை சந்திப்பை நடத்தி இதற்கு விளக்கமளித்திருக்க வேண்டும்.

யார் இந்த இளைஞர்? எப்படி ஒருவருக்கு 8 முறை வாக்களிக்க உரிமை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு வாக்குதான். 8 வாக்குகள் கொடுப்பது பாஜக அரசியல் மட்டும்தான். அதுவும் பாஜகவைச் சார்ந்தவர்களுக்கு. பாஜக வெற்றி பெறும் என சொல்லிக்கொள்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட வெற்றி பெறும் என சொன்னார்கள். அது எப்படி சாத்தியம் என பார்த்தால், அவர்கள் இவிஎம் இயந்திரத்தை நம்பி மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள். மக்களை நம்பி தேர்தலில் நிற்கவில்லை என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள். அதள பாதாளத்தில் இந்தியப் பொருளாதாரத்தை தள்ளுவார்கள். கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகள். தேசிய கட்சி, வாக்குறுதிகளை எல்லாம் தாமாசுக்கு சொன்னோம் என சொல்லும் அளவிற்கு மக்களை ஏமாளி என நினைக்கும் ஒரே கட்சி பாஜக. இவை அனைத்தையும் மீறி INDIA கூட்டணி ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com