"கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன்" - கபில் சிபல் !

"கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன்" - கபில் சிபல் !
"கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன்" - கபில் சிபல் !

கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபல் தெரிவித்துள்ளார்

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். இந்நிலையில்
ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக் கெலாட் 90-க்கும் மேற்ட்ட
காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார். மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற
நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்னையின்றி நடந்து முடிந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக
அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும், "ராஜஸ்தானில் ஆட்சியமைக்க, எம்.எல்.ஏ.,க்கள் அணி மாற விலை பேசப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சில எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.15 கோடி வரை பணம் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சலுகைகள் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 7 எம்.எல்.ஏ.,க்களை வாங்கிய பா.ஜ., தற்போது, அதனை இங்கேயும் செய்ய நினைக்கின்றனர்" என அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அம்மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவுக்கொண்ட 25 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபல் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், நமது கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பிறகு தான் நாம் கவலைப்படுவோமா என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com