மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா. ”இந்நிகழ்வு வராலாற்று சிறப்பு மிக்க ஒன்று” என்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பெருமிதம்.
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா முகநூல்

முன்னதாக மக்களவையில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் வகையில் புதிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகளில் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடம்
நாடாளுமன்ற கட்டடம்
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா; மக்களவையில் பெண் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள்

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதமும் நடைப்பெற்றது. 11 மணி நேரம் நடைபெற்ற இவ்விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மகளிர் எம்.பிக்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து பேசினர்.

இவ்விவாதம் நடந்து முடிந்ததற்கு பிறகு மாநிலங்களவை தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் முன்னிலையில் வாக்கெடுப்பானது நடைப்பெற்றது.

துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர்
துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர்

இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்த 215 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். துணை குடியரசுத் தலைவரான ஜகதீப் தன்கர் இது குறித்து கூறுகையில் “ஒருவர் கூட இதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை. இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. இதன் மூலம் மசோதா நிறைவேறுவதற்கு தேவையான 3 ல் 2 பங்கு ஆதரவுக்கு மேலாக மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது” என்றார்.

முன்னதாக 454 க்கு 2 என்ற வாக்குகளின் எண்ணிக்கையில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com