\
supreme court
supreme courtpt desk

ஆங்கிலத்தை ஏன் உள்நாட்டு மொழியாகக் கருதக்கூடாது? - உச்ச நீதிமன்றம்

பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலம், பல பகுதிகளில் முதன்மைத் தொடர்பு மொழியாக உள்ள நிலையில், அதை உள்நாட்டு மொழியாக ஏன் ஏற்கக்கூடாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Published on
Summary

மும்பை ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சலுகை மறுத்ததை challenging செய்யும் வழக்கை விசாரித்தபோது, ஆங்கிலம் இந்திய உள்நாட்டு மொழி அல்ல என்று கருதுவதற்கான காரணம் என்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆங்கில மொழியை ஏன் ஓர் இந்திய உள்நாட்டு மொழியாகக் கருதக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மும்பையிலுள்ள ஆங்கில வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சில சலுகைகளை மறுத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் இந்த கருத்தை முன்வைத்துள்ளது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆங்கிலம் பேசப்பட்டு வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளில் அது முதன்மைத் தொடர்பு மொழியாக விளங்குவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஒரு மொழியின் தோற்றத்தை மட்டும் வைத்து பாகுபாடு காட்டக் கூடாது என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஆங்கிலமும் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விரிவான விசாரணைக்காக ஜூலை 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

supreme court
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் மூன்றாம் மொழி கட்டாயம்.. தேர்ச்சி பெறுவது அவசியம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com