what reason of 19 Government Bills Pending In Rajya Sabha
மாநிலங்களவைpti

34 வருட மசோதாவும் ஒன்று.. மாநிலங்களவையில் முடங்கிக் கிடக்கும் 19 மசோதாக்கள்.. காரணம் என்ன?

மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான ஒரு மசோதா 34 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இன்றி உள்ளது.
Published on

மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான ஒரு மசோதா 34 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இன்றி உள்ளது.

மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றில் மிகவும் பழமையானது, மக்கள் தொகைக் கட்டுப்பாடு தொடர்பான மசோதா ஆகும். இது 1992-ஆம் ஆண்டைச் சேர்ந்தது.

what reason of 19 Government Bills Pending In Rajya Sabha
மாநிலங்களவைட்விட்டர்

இந்த மசோதா, மாநிலக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்தி, அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் சிறிய குடும்பநெறியை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறிய குடும்பநெறியை ஊக்குவிப்பதையும் பின்பற்றுவதையும் அடிப்படை கடமைகளில் சேர்க்க வேண்டும் என்றும் முன்மொழிந்தது. மேலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அது முன்மொழிந்தது.

what reason of 19 Government Bills Pending In Rajya Sabha
கைது செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள் 30 நாட்களில் பதவி நீக்கம்.. புதிய மசோதா அறிமுகம்!

இது தவிர, நிலுவையில் உள்ள மசோதாக்களில், வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட டெல்லி வாடகைச் சட்டம், 1995-ஐ திருத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட டெல்லி வாடகை (திருத்த) மசோதா, 1997-ம் அடங்கும். ஆனால், இது குத்தகைதாரர் மற்றும் நில உரிமையாளர் குழுக்களிடமிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பை எதிர்கொண்டது. அரசு, 'விதை மசோதா 2025'-ஐக் கொண்டுவரப் பணியாற்றி வரும் நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்களில், விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் விதைகளின் தரத்தைக் கட்டுப்படுத்தவும், தரமான விதைகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை எளிதாக்கவும் நோக்கமாகக் கொண்ட 'விதை மசோதா, 2004'-ஆம் அடங்கும்.

what reason of 19 Government Bills Pending In Rajya Sabha
மாநிலங்களவை x page

நிலுவையில் உள்ள மற்றொரு மசோதா, 'மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா, 2011' ஆகும். இது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது. மற்ற நிலுவை மசோதாக்களில், கட்டடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் (திருத்த) மசோதா, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (கட்டாய காலியிட அறிவிப்பு) திருத்த மசோதா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைத்தல் (மூன்றாவது) மசோதா ஆகியவை அடங்கும். தவிர, வடகிழக்கில் பழங்குடியினரின் தன்னாட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்பு மசோதா மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணப் பதிவு மசோதா ஆகியவை அடங்கும். மேலும், மிகச் சமீபத்திய நிலுவை மசோதாவான பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவும் அடங்கும். மக்களவையில் ஒரு மசோதா தாக்கலாகி நிறைவேற்றப்படவில்லை என்றால் அதன் பதவிக்கால முடிவில் தானாகவே காலாவதியாகிவிடும். ஆனால் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் பதவிக்காலம் சுழற்சி முறையில் இருப்பதால் மசோதாக்கள் நிலுவையிலேயே இருக்கின்றன. மாநிலங்களவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

what reason of 19 Government Bills Pending In Rajya Sabha
ஊரக வேலை திட்ட மசோதா தாக்கல் | எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. மாநிலங்களுக்கு ரூ.36,000 கோடி நிதி சுமை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com