uttarakhand last years floods details
உத்தராகண்ட்x page

பேரிடர்களின் துயர பிரதேசம்.. உத்தரகாண்ட்டில் 9 ஆண்டுகளில் மட்டும் இத்தனை இழப்புகளா?

கடந்த 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலக்கட்டத்தில், 18 ஆயிரத்து 464 இயற்கைச் சீற்றங்கள் அம்மாநில மக்களின் வாழ்வை புரட்டிபோட்டுள்ளதுடன், பெருமளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
Published on

பனிப்போர்வையை போர்த்தி விளையாட சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீகத்தில் கரைந்து போக பக்தர்களும் குவியும் உத்தராகண்ட் மாநிலம், பேரிடர்களின் பிரதேசமாகி வருகிறது. கடந்த 2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலக்கட்டத்தில், 18 ஆயிரத்து 464 இயற்கைச் சீற்றங்கள் அம்மாநில மக்களின் வாழ்வை புரட்டிபோட்டுள்ளதுடன், பெருமளவில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. சராசரியாக ஆண்டிற்கு, 2 ஆயிரத்து 51 பேரிடர்கள் உத்தராகண்ட்டில் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

uttarakhand last years floods details
உத்தராகண்ட்AFP

கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்த பேரிடராக கனமழையும், வெள்ளமும் உள்ளன. 12 ஆயிரத்து 758 மழை, வெள்ளப் பேரிடர்கள் அம்மாநிலத்தைத் தாக்கியுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும், 67 மேகவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன. 9 ஆண்டுகளில் இந்த பேரிடர்களால், 3 ஆயிரத்து 667 கான்கிரீட் மற்றும் சாதாரண வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. அதேபோல், 9 ஆயிரத்து 556 கான்கிரீட் வீடுகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூரை வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன. இயற்கை பேரிடரை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அம்மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்.

uttarakhand last years floods details
உத்தரகாண்ட் | திடீரென பயங்கர மேகவெடிப்பு.. அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com