ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தகுதி வாய்ந்தவர்களில், 50 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை ஊசி செலுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 18 முதல் 44 வயதுடையவர்களில் 23 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 731 பேருக்கு முதல் தவணையும், 2 கோடியே 33 லட்சத்து 74 ஆயிரத்து 357 பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.