இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தாக்குதல்..!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ரஷ்ய தலைநகர் மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் ISIS பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால், 40 பேர் உயிரிழப்பு, 145-கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.

  • டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • ஆளுநரை வைத்து தமிழக அரசை பாஜக மிரட்டுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாகவும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

  • ராஜ்பவனிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக ஆளுநரிடம் கூறினேன். ஆளுநரும் Best Of LUCK சொன்னதாக திருச்சி பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • உச்சநீதிமன்ற கண்டிப்பை அடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.இந்நிலையில், பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  • அமைச்சர் காந்தியின் வசமிருந்த கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

  • மகளிருக்கு மாதந்தோறும் மூன்றாயிரம் ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.

  • 15 பெயர்களை கொண்ட இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.இதில், ராதிகா சரத்குமார், கே.பி.ராமலிங்கம், ஏ. பி.முருகானந்தம் உள்ளிடோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • பிரதமர் மோடி சொன்னதாலேயே தேர்தலில் போட்டியிடுகிறேன்.மேலும், கோவையிலேயே முதலமைச்சர் தங்கியிருந்து பரப்புரை செய்தாலும் பாஜகதான் வெல்லும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

  • தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், விருதுநகரில் களமிறங்குகிறார் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர்.

  • தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் அன்புமணியின் மனைவி சௌமியா போட்டியிடுகிறார். மேலும், கடலூர் தொகுதியில் களம் காண்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

  • பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதனை, 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  • இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றதை அடுத்து, ஒன்றாம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.

  • ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே. இதன்காரணமாக, சென்னையிலிருந்து நாகர்கோயில் உட்பட பல்வேறு தடங்களில் 28 ரயில்கள் இயக்கப்படுகிறது.

  • இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

  • 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம்,இதனால், இவ்வழக்கு விசாரணை மே மாதத்தில் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு புஷ்பக் விண்கலம் விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

  • புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்.இந்நிலையில், அரசமைப்பு விதிமுறைகளுட்பட்டு செயல்படவிருப்பதாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

  • கேரளாவில் தன்னை காண குவிந்த ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்.இதில், தமிழகமும், கேரளாவும் தனக்கு இரண்டு கண்கள் போன்றவை எனப் பேசியுள்ளார்.

  • நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில், பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com