காலை தலைப்புச் செய்திகள்|பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் to வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம்

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்ட பாஜக முதல் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் வரை
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

மக்களவை தேர்தலை முன்னிட்டு 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது பாஜக. இப்பட்டியலில் 34 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காலை தலைப்புச் செய்திகள்
பாஜக வேட்பாளர்கள் பட்டியல்: 195 இடங்கள் வெளியீடு.. வாரணாசியில் பிரதமர் மோடி போட்டி

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.மேலும், அமித்ஷா காந்தி நகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும் களம் காண்கின்றனர்.

பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தமது நல்லாட்சி குறித்து எடுத்துரைத்து மக்களிடம் ஆதரவு கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் யாரை தைரியமாக தேர்தலில் நிற்க வைப்பது என்ற குழப்பம் பாஜகவுக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுடன் திமுகவின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. இதன்படி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் தலா ஒரு தொகுதி கோரியுள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி இருக்கும் என கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக திட்டம். மேலும், புதிய தமிழகம் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைப்பெற்றுவருகிறது.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது பாஜக. தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை.

தஞ்சை மாவட்டத்தில் புதிய வட்டமாக திருவோணம் உருவெடுத்துள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திமுக என்ற கட்சி இல்லாமல் போவதற்கான அடித்தளமாக 2024 தேர்தல் அமையும் என இந்திய ஜனநாயக கட்சியின் மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு..

ஆவின் நிறுவனத்தின் 4 வகை ஐஸ் க்ரீம்கள் 5 ரூபாய் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, இன்று முதல் விலை உயர்வு அமல்.

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் துவக்கம். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை கடத்தல் குறித்து பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது, அழைப்பு வராத நிலையில் இணைய சேவையும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர்.

கடும் எதிர்ப்பை தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாம்பல் காடு போல் காட்சியளித்த மேட்டூர் அனல்மின் நிலைய வளாகம், அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்...

தஞ்சை அருகே தோப்பிற்குள் போலி மதுபான ஆலை நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், காலி மதுபாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் அருகே டாஸ்மாக் கடை ஊழியரை வழிமறித்து 94 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் ஊழியர் கத்தியால் தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக 8 தனிப்படைகள் விசாரணை நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகள், தடயங்களைக் கொண்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆராய்ந்து வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் திறக்கப்பட்டு சில மாதங்களே ஆன மேம்பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. மோசமாக சேதமடைந்து காணப்படுவதால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை தேவைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகும் காசா மக்கள், மாவுப் பைகளை போட்டிபோட்டு பெற்றுச்சென்ற அவலம் நிறைந்த காட்சிகள்.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது தமிழ்நாடு அணி.

ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் பஞ்சாப்பை பந்தாடியது மும்பை அணி. மற்றொரு போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது பெங்களூரு அணி.

மும்பை தொழிலதிபரை மணக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார். இருவீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com