இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

தலைப்புச் செய்திகள் | தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் முதல் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி வரை

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் முதல் டெல்லி நோக்கி மீண்டும் விவசாயிகள் பேரணி வரை முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் விவசாயிகள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பார்க்கப் படுகிறது.

  • ஒன்றரை லட்சம் ஏழைகளை வறுமையிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத்திட்டம் அறிமுகம். 2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

  • உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம். மேலும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்
தமிழ்ப் புதல்வன் திட்டம்
  • அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. ஆயிரம் மாணவர்களுக்கு குடிமைப்பணித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவிப்பு.

  • மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவாக்கம். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 13,720 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாற்றுப் பாலினத்தவரின் அனைத்துக்கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் அமைகிறது விண்வெளி தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web
  • “அரசின் கனவு நனவாக வேண்டும். நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு அறிவிப்பிலும் ஈரமுள்ளது, இதயமுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.

  • தமிழக பட்ஜெட் கானல் நீர் போன்று இருக்கிறது. வளர்ச்சித் திட்டம் எதுவும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

  • “திமுக அரசின் கடனைப் பற்றிக் கவலைப்படும் எடப்பாடி பழனிசாமி, மோடி அரசின் கடனைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி.

  • “ஒவ்வொருவர் பெயரிலும் 1,20,000 ரூபாய் கடன் இருக்கிறது. எங்கே போகிறது தமிழகத்தின் பொருளாதாரம்?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
  • மக்களவை தேர்தலில் கேரளாவில் காங்கிரஸூம், மேற்குவங்கத்தில் பாஜகவும் அதிக தொகுதிகளை பெறும் என புதிய தலைமுறை தி ஃபெடரல் இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்.

  • சென்னை கொடுங்கையூரில் திமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மமக நிர்வாகியை தாக்கியதாக திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

  • சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தவரை தாக்கிய சம்பவத்தால் கோயம்பேடு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

  • பாஜகவின் பிள்ளை பிடிக்கும் வேலை விஜயதாரணியிடம் பலிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி.

  • திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வாய்ப்பு என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.

  • இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இலக்கு என்றும் கட்சி பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் தகவல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”2 கோடி உறுப்பினர்களை சேர்க்கணும்” - தவெக நிர்வாகிகளுக்கு டார்கெட்! பொறுப்பு யாருக்கு என விளக்கம்!
புஸ்ஸி ஆனந்த், விஜய்
புஸ்ஸி ஆனந்த், விஜய்pt web
  • சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசியர்கள் கைது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தல்.

  • மக்களவை தேர்தலின் வெற்றியை நோக்கிய பயணத்தில் அடுத்த 100 நாட்களும் மிக முக்கியமானவை என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் விரைவில் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சென்னை: தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் - நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
  • மீனவர்களிடம் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. இலங்கை நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தி ராமேஸ்வரம் முதல் ராமநாதபுரம் வரை இன்று பேரணி நடத்த திட்டம்.

  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மதுரையில் சிகை தானம் செய்த கல்லூரி மாணவிகள்.

  • அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி.

  • மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி.

  • “வாக்குச் சீட்டில் எழுதும்போது கேமராவை பார்த்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என சண்டிகர் மேயர் தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
சண்டிகர் மேயர்: மனோஜ் சோன்கர் ராஜினாமா! ஆனா, பாஜக போட்ட Sketch ஆல் AAP அதிர்ச்சி! திடீர் ட்விஸ்ட்!
  • மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்த விவசாய சங்கங்கள். நாளை முதல் டெல்லியை நோக்கி பேரணி தொடரும் என திட்டவட்டம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com