காலை தலைப்புச் செய்திகள் | கொங்கு மண்டலமும் பாஜகவும் - தோழர்கள் அன்பில் நனைந்த விஜய்!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது திமுக ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை முதல் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
காலை தலைப்புச் செய்திகள்
காலை தலைப்புச் செய்திகள்புதிய தலைமுறை
  • திருச்சி மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நிறைவு.

  • திமுக முடிவு செய்பவர்தான் பிரதமராக முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி பேச்சு

  • காவிரி நீரை முழுமையாக பெறாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

  • “அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது மக்கள் கோபத்தில் இருக்கின்றனர்” - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம்.

  • “பாஜகவை தவிர மற்ற கட்சிகளை கூட்டணிக்கு வரவேற்போம்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

ஜெயக்குமார் - அண்ணாமலை
ஜெயக்குமார் - அண்ணாமலைPT
  • வரும் 11ஆம் தேதி சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. சென்னையில் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு.

  • “4 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக கொங்கு மண்டலத்துக்கு என்ன செய்தது? ”- கொங்கு ஈஸ்வரன் கேள்வி

    “பாஜக எம்எல்ஏக்கள் என்ன செய்தோம் என்பது தொகுதி மக்களுக்கு தெரியும்” - கொங்கு ஈஸ்வரனுக்கு வானதி சீனிவாசன் பதில்.

  • அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்PT
  • வழிவிடுவது தொடர்பாக சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்.

  • எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு தொடர்பாக தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

  • ஆம்பூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபயணம் மேற்கொண்டதாக புகார்.

  • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிலர் நடனமாடி வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • அயன் பட பாணியில் தங்கம் கடத்தல். சுமார் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல். மதுரை விமான நிலையத்தில் ஒருவர் கைது.

  • ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி விவகாரத்தில் 700 ஏஜெண்டுகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை.

  • புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் அறியவில்லை - அசாம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

  • “பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது காங்கிரஸ் கட்சி..” - ஜார்க்கண்ட் யாத்திரையின்போது ராகுல் காந்தி பேச்சு.

  • ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்...

  • பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல்.

  • ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு. வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் வீதிகள்.

  • ரஷ்யாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் கைது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்ததால் நடவடிக்கை.

  • சிலி நாட்டில் பயங்கர காட்டுத்தீ. உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு.

  • ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மீது பிரிட்டன் தாக்குதல். தங்களது கப்பல்களை தாக்கியதால் பதிலடி நடவடிக்கை என பிரதமர் ரிஷி சுனக் விளக்கம்.

  • 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com