இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் | மகளிர் டென்னிஸ் போட்டி

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் செய்யப்பட்டது முதல் மகளிர் டென்னிஸ் போட்டி வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

  • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன் என புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

  • தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் நியமனம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

  • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை குழுத் தலைவர் ராஜேஷ்குமார் இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பதால் பயணிகள் அவதியுற நேரிடும். பயணிகளின் சிரமத்தை போக்க கூடுதல் மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • ஆந்திரா, கர்நாடகாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியால், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என்று அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேட்டி.

  • நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. பாசிசம் வீழும் இந்தியா வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

  • நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் உறுதியாக கிடைக்கும்.ஆகவே சின்னம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக சீமான் தகவலளித்துள்ளார்.

  • மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அதிமுக அறப்போராட்டத்தை நடத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • ஆர்டிஐ மூலம் கிடைக்கப்பெற்ற பரந்தூர் விமான நிலையத்தின் வரைபடம் மூலம் ஏகனாபுரம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் வழியே விமான ஓடுபாதை அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • அபுதாபியில் உண்ண உணவு, வசிக்க இடமின்றி தவித்து வரும் தமிழக தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்குமாறு வீடியோ பதிவிட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  • கன்னியாகுமரியில் உணவகத்திற்கு ஆட்களை அழைத்து வருவதில் வடமாநில தொழிலாளர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. கத்தி, கம்புடன் அடிதடியில் ஈடுபட்டு, பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • கழிவுநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட உறை குழியில் விழுந்து இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம் அரியலூர் அருகே அரங்கேறியுள்ளது.

  • நச்சு ரசாயனம் கலக்கப்படுவது உறுதியானால் அதிரடி நடவடிக்கை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பஞ்சுமிட்டாய்க்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு.

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

  • வானிலையை துல்லியமாகக் கணிக்கும் திறன் கொண்ட இன்சாட் 3DS செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்கான நடவடிக்கை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

  • டெல்லி சட்டமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி.

  • சீனாவில் திடீரென வீசிய பனிப்புயலில் சிக்கிய வாகன ஓட்டிகளை நீண்ட நேரம் போராடி மீட்புக்குழுவினர் மீட்டனர்.

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் சதம் விளாசினார் ஜெய்ஷ்வால். 322 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

  • கத்தாரின் தோகாவில் நடந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போலாந்து வீராங்கனை.

  • சென்னை போரூர் அருகே நடந்த "கோட்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண குவிந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார் நடிகர் விஜய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com