திருப்பதி: திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் - இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு
செய்தியாளர்: நரேஷ்
திருப்பதி திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இரவு ஒருமணி முதல் தரிசன நடைமுறை ரத்து செய்யப்பட்டு மீண்டும் இன்று அதிகாலை 5 மணி முதல் தரிசனம் நடைமுறை துவங்கும் எனவே கூடுதலாக பக்தர்களை இலவச தரிசனத்திற்காக அனுமதிக்க இயலாத நிலையில், இன்று காலை வரை பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக வரிசையில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் வரிசையில் செல்ல இயலாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.