பிரசாந்த் பூஷணுக்கு அரைமணி நேரம் கெடுவிதித்த உச்ச நீதிமன்றம்..!

பிரசாந்த் பூஷணுக்கு அரைமணி நேரம் கெடுவிதித்த உச்ச நீதிமன்றம்..!
பிரசாந்த் பூஷணுக்கு அரைமணி நேரம் கெடுவிதித்த உச்ச நீதிமன்றம்..!

பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் அரைமணி நேரம் கெடு விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி குறித்தும், முந்தைய 4 தலைமை நீதிபதிகள் குறித்தும் சமூக செயல்பாட்டாளரும் மற்றும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் பிரசாந்த் பூஷண் அந்த கருத்துகளை திரும்பப்பெற, உச்ச நீதிமன்றம் கடைசியாக அரைமணி நேரம் அவகாசம் அளித்துள்ளது. பிரசாந்த் பூஷன் தனது தவறை உணர்ந்து இதுவரை மன்னிப்பு கடிதம் அளிக்கவில்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com