தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்pt web

“வாக்காளர் வரைவு பட்டியலில் எனது பெயரே இல்லை” - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
Published on

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் தம்முடைய பெயர் விடுபட்டுள்ளதால் எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ள நிலையில், இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். எனவே, எவ்வாறு தேர்தலில் போட்டியிட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு தேர்தல் ஆணையம் உடன்படாவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும் இது குறித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

தேஜஸ்வி யாதவ்
”சிவபெருமானிடம் உறுதிமொழி ஏற்றேன்..” ராஜேந்திர சோழனுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

மொத்த வாக்காளர்களில் 8 புள்ளி 4 சதவிகிதம் பேரை அதாவது 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக தேஜஸ்வி குற்றம் சாட்டினார். வெள்ளிக்கிழமையன்று பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

கேள்விகளுக்கு மேலதிகமாக, தேர்தல் ஆணையத்திடமிருந்து எங்களுக்கு முக்கிய கோரிக்கைகள் உள்ளன:-

1. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாத அனைத்து வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலையும், அதற்கான காரணங்களையும் தேர்தல் ஆணையம் உடனடியாக வழங்க வேண்டும்.

2. இறந்த, இடம் பெயர்ந்த, மீண்டும் மீண்டும் சேர்க்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலை சட்டமன்ற வாரியாகவும் வாக்குச்சாவடி வாரியாகவும் வெளியிட வேண்டும்.

3. இந்த வெளிப்படைத்தன்மை மீட்டெடுக்கப்படும் வரை, வரைவு வாக்காளர் பட்டியலுக்கு ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் 7 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது.

4. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரித்து, தேர்தல் ஆணையத்திடம் விரிவான விளக்கத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

bihar tejashwi yadav react on election commission new commissioner appointment
தேர்தல் ஆணையம், தேஜஸ்வி யாதவ்எக்ஸ் தளம்

ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு வாக்காளரின் இருப்பும் உரிமைகளும் மிக முக்கியமானவை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டு, அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் மறைக்கப்பட்டால், இது ஒரு கடுமையான ஜனநாயக நெருக்கடி மற்றும் மக்களின் வாக்குரிமை மீதான நேரடித் தாக்குதல்.

SIR 2025 அரசியலமைப்புக்கு எதிரான பரிசோதனையாக மாறி வருகிறது. இது வாக்காளர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல், தேர்தலின் நியாயத்தன்மை குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது.

RJD இந்த சதியை தீவிரமாக எதிர்க்கும் மற்றும் அனைத்து தளங்களிலும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும்” என்று தேஜஸ்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com