”இது மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம்”-3 சட்டங்களில் ‘பாரத்’ பெயர்.. முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

3 சட்டங்களின் பெயர் மாற்ற மசோதா மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
DMK
MK Stalin
DMK MK Stalinpt web

இந்தியாவில் வழக்குகள் எப்படி பதிவு செய்யப்படுகின்றன, விசாரணை எப்படி நடக்கிறது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வரும் மூன்று சட்டத்திருத்தங்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்துள்ளார். இதில் ஐபிசி அல்லது இந்திய தண்டனை சட்டம் புதுப்பிக்கப்பட்டு ‘பாரதிய நியாய சங்ஹீத’என்ற பெயருடன் புது சட்டமாக மாற உள்ளது.

கிரிமினல் புரோசீஜர் கோட் அல்லது இந்திய குற்றவியல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பாரதிய சக்ஷ்யா என்றும் இந்திய ஆதார சட்டம் பாரதிய நாகிரிக் சக்ஷயா என்றும் பெயர் மாற்றுவதற்கான சட்டத்திருத்தத்தை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.

இந்த மூன்று சட்டங்களும் புதிய உருவம் புதிய வடிவம் பெறுகின்றன என்றும் இந்த சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் மக்களுக்கு சுலபமாக இருக்கும் வகையிலும் குற்றவியல் நடைமுறைகள் மாற்றப்படுகின்றன என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாரதிய நியாய சங்ஹீத, பாரதிய சக்ஷ்யா, மற்றும் பாரதிய நாகிரிக் சுரக்ஷ்ய சாங்ஹீத ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க மத்திய பாஜக அரசு மேற்கொண்ட துணிச்சலான முயற்சி மற்றும் மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவமாகும். இது இந்தியாவின் ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை.

தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கு உரிமையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கு உரிமையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

வரலாற்றில், தமிழகமும் திமுகவும், இத்தகைய அடக்குமுறை மேலோட்டங்களுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம், தளராத உறுதியுடன் அதை மீண்டும் அதைச் செய்வோம்.

இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் பாஜகவின் துணிச்சலான முயற்சி உறுதியாக எதிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com