எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிராக மஹுவா மொய்த்ரா தொடர்ந்த வழக்கு - ஜன.3இல் விசாரணை!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை, உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.
Supreme court, Mahua Moitra
Supreme court, Mahua MoitraPT

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை, உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராபுதிய தலைமுறை

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். அதன்படி வழக்கு இன்று (டிச.15) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கு ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Supreme court, Mahua Moitra
எம்.பி. பதவி நீக்கம்: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா விசாரணையை எதிர்கொண்டார். இதுதொடர்பாக, மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. அதில், மஹுவா மொய்த்ராவைப் பதவிநீக்கம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மக்களவையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக குரல் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராட்விட்டர்

அதன்படி, எம்.பி. பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா். அவையில் மஹுவா மொய்த்ரா பேசுவதற்குக்கூட வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும், இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா, “முழுமையான விசாரணை நடத்தப்படாமல் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும், இயங்கி வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

மஹுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜி
மஹுவா மொய்த்ரா, மம்தா பானர்ஜிட்விட்டர்

தொடர்ந்து இவருடைய பதவி நீக்கத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன், மஹுவாவுக்கும் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”தாமதமானாலும் நல்ல தீர்ப்பு”- பாலியல் வன்கொடுமை வழக்கில் உ.பி. பாஜக எம்.எல்.ஏ-க்கு 25 ஆண்டுகள் சிறை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com