தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் என்ற முன்களப் பகுதிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.