எல்ஐசி நிறுவனம்
எல்ஐசி நிறுவனம்முகநூல்

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா?

காலாவதியான எல்ஐசி பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on
Summary

எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க உதவும் வகையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) நாடு தழுவிய 'சிறப்பு திட்டம்’ ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஆகஸ்ட் 18 முதல் அக்டோபர் 17, 2025 வரை நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. ஆகும். இந்த நிறுவனம் தற்போது தனிநபர் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க ஒரு மாத கால சிறப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம், பிரீமியம் செலுத்த முடியாமல் பழைய பாலிசிகளை இழப்பவர்களுக்கும், பாதுகாப்பு விலகாமல் இருக்க எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும் உதவுகின்றது.

lic
licFB

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரீமியத் தொகையைப் பொறுத்து, அதிகபட்சமாக ₹5,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.. இதில் 30% வரை தாமதக் கட்டணச் சலுகைகளை LIC வழங்குகிறது. மேலும் மைக்ரோ காப்பீட்டு பாலிசிகளுக்கு 100% தாமதக் கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு முந்தைய காலாவதியான பாலிசிகளும் புதுப்பிக்கக்கூடும்.

எல்ஐசி நிறுவனம்
இவ்வளவு கம்மியாவா..? வரலாறு காணாத அளவில் உயர்ந்து.. மொத்தமாக சரிந்த தங்கம் விலை?

எல்.ஐ.சியின் கூற்றுப்படி, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் பாலிசிகளை புதுப்பிக்க முடியும். பிரீமியம் செலுத்தும் காலத்திற்குள் இருக்கும் மற்றும் இன்னும் முதிர்ச்சியடையாத பாலிசிகள் மட்டுமே தகுதியுடையவை. இருப்பினும், புதுப்பித்தல் சாதாரண மருத்துவ மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு உட்பட்டது, அந்த விஷயத்தில் எந்த சலுகைகளும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..

நிதி பற்றாக்குறை அல்லது தனிப்பட்ட சிரமங்கள் காரணமாக பணம் செலுத்தத் தவறிய பாலிசிதாரர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த சிறப்பு திட்டத்தின் நோக்கமாகும். "முழு காப்பீட்டு சலுகைகளையும் உறுதி செய்வதற்காக கொள்கைகள் நடைமுறையில் இருக்க வேண்டும். பழைய பாலிசியை புதுப்பிப்பது காப்பீட்டுத் தொகையை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் குடும்பங்களுக்கான நிதிப் பாதுகாப்பையும் இது பலப்படுத்துகிறது," என்று எல்ஐசி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

எல்ஐசி நிறுவனம்
யுனிலிவரின் முதல் பெண் சிஇஓ.. வரலாற்றை புரட்டிப்போட்ட பெண்.. யார் இந்த பிரியா நாயர்?

பாலிசிதாரர்கள் இந்த வரையறுக்கப்பட்ட கால வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறவும், தங்கள் அன்புக்குரியவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளது..

மேலும் விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் (http://www.licindia.in) ஐப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com