ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா

ஆபாச பேச்சு புகார்: கேரள அமைச்சர் ராஜினாமா
Published on

பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரை அடுத்து கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ராஜினாமா செய்தார்.

பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் சசீந்திரன். பெண் ஒருவரிடம் அமைச்சர் ஆபாசமாக பேசியது போன்ற ஆடியோ ஒன்று அம்மாநில ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் சசீந்திரன் அறிவித்தார். பதவியை ராஜினாமா செய்வதால் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக பொருள் இல்லை என்றும் சசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com