karnataka vegetable vendor from gets rs 29l gst tax
karnatakapti

கர்நாடகா | காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் வரி.. பின்னணிக் காரணம் என்ன?

கர்நாடக காய்கறி வியாபாரி ஒருவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Published on

கர்நாடக காய்கறி வியாபாரிக்கு ரூ.29 லட்சம் வரி

இந்தியாவில் தற்போது பெருமளவில் பணத் தேவைகள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டு வருகிறது. அதாவது, பெரும்பான்மையான மக்கள் பலரும் யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெரிய கடைகள் முதல் சாலையோர சிறு கடைகள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ செயலிகள் மூலமாகவே நுகர்வோர்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சில வணிகர்கள் திடீரென தங்களுடைய கடைகளில் இனிமேல் யுபிஐ வகையில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் எனவும், பணம் மட்டுமே இங்கே வாங்கப்படும் எனவும் நோட்டீஸ் ஒட்டி அறிவிப்பு செய்திருந்தனர். இது, நாடு முழுவதும் பேசுபொருளானது. இதற்குக் காரணம், யுபிஐ செயலிகள் மூலமாக அவர்கள் அதிகளவு லாபம் ஈட்டியிருப்பதாகவும் அதன்பொருட்டே அவர்களுக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்தே அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
model imagemeta ai

மேலும் அதற்கு உதாரணமாய் கர்நாடகா மாநிலம் ஹாவேரி எனும் பகுதியில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்திற்கு அருகில் ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வரும் சங்கர்கௌடா ஹடிமணி என்பவருக்கு ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், ’கடந்த நான்கு ஆண்டுகளில் 1.63 கோடிக்கு பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்காக ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் சங்கர்கௌடாவுக்கு பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
நடுத்தர வர்க்கத்தினருக்கு விரைவில் நிவாரணம்.. 12% ஜிஎஸ்டி பொருட்களைக் குறைக்க பரிசீலனை!

வரிவிதிப்பு நோட்டீஸுக்குக் காரணம் என்ன?

இதுகுறித்து அவர், “நான் புதிய காய்கறிகளை விற்பனை செய்கிறேன். இப்போதெல்லாம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்து வருவதில்லை. யுபிஐ முறையைத்தான் பயன்படுத்துகின்றனர். நான் ஒவ்வோர் ஆண்டும் உடனடியாக IT வருமான வரி தாக்கல் செய்கிறேன். அதற்கான பதிவுகள் என்னிடம் உள்ளன. ஆயினும், GST அதிகாரிகள் ரூ.29 லட்சம் வரி கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி செலுத்த முடியும்" எனப் புலம்புகிறார்.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
pti

ஆனால் இங்கே திருப்பம் என்னவென்றால், புதிய காய்கறிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவருக்கு இவ்வளவு பெரிய வரி பில் வந்தது எப்படி என காரணம் எழலாம். இதுகுறித்து டெலாய்ட்டின் கூட்டாளியான ஹர்ப்ரீத் சிங் இந்தியா டுடேவிற்கு அளித்துள்ள பேட்டியில், “புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனைக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதில்லை (அவை பேக் செய்யப்பட்டாலோ அல்லது லேபிளிடப்பட்டிருந்தாலோ தவிர). இருப்பினும், வங்கிகள் அல்லது டிஜிட்டல் சேனல்கள் மூலம் பணம் செலுத்தப்படும்போது, வரி அதிகாரிகள் இந்தப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். ஒரு விற்பனையாளரின் மொத்த விற்பனை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டினால், வணிகத்தைச் சரிபார்க்க வரித் துறை ஆதாரம் மற்றும் பதிவுகளைக் கேட்கலாம். இதனால்தான் புதிய காய்கறிகள் போன்ற விலக்கு பெற்ற பொருட்களை விற்கும் சிறு விற்பனையாளர்கள் சில நேரங்களில் தங்கள் விற்பனையை நியாயப்படுத்துமாறு கேட்டு வரி அறிவிப்புகளைப் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
ம.பி|’உங்களுக்கு ரூ6 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி இருக்கு’ - முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு வந்த நோட்டீஸ்!

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதற்கிடையே, சமீபகாலமாக கர்நாடகா ஜிஎஸ்டி துறை டிஜிட்டல் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் வணிகர்களை உன்னிப்பாக கவனத்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையிலேயே, ஜிஎஸ்டி வரம்பை மீறும் வணிகர்கள் பதிவுசெய்து வரி செலுத்தவில்லை என்றால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
gst x page

இவ்விவகாரம் குறித்து பேக்கர் டில்லி ASA இந்தியாவின் கணக்கியல் மற்றும் வணிக ஆதரவு கூட்டாளர் சந்தீப் குப்தா இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், "டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஒரு தெளிவான பரிவர்த்தனை பாதையை விட்டுச்செல்கின்றன. வரி அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களை வளைக்க ஆர்வமாக இருப்பதற்கு இது ஒரு எளிதான இலக்காகும். ஆய்வு இயல்பாகவே தவறல்ல என்றாலும், மொத்த பரிவர்த்தனை அளவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக தெரு விற்பனையாளர்களுக்கு வரி அறிவிப்புகளை வெளியிடுவது பொறுப்பற்றது மற்றும் நியாயமற்றது" என அதில் கூறியுள்ளார்.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
அரிசி மீதான ஜிஎஸ்டி வரி; முழுமையாக நீக்க கோரி வலுக்கும் கோரிக்கை!

ஜிஎஸ்டியின் மாறிவரும் முகம்

அதேபோல் ஜிஎஸ்டி ஆலோசகரான சித்தார்த் சுரானாவும் இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பதிலில், “இதுபோன்ற வழக்குகள் இந்தியாவில் ஜிஎஸ்டியின் மாறிவரும் முகத்தைக் காட்டுகின்றன. கர்நாடக காய்கறி விற்பனையாளரின் வழக்கு, ஜிஎஸ்டியின் வளர்ந்து வரும் மாற்றத்தை விளக்குகிறது. இது வெளிப்படையானது, தரவு சார்ந்தது மற்றும் பொருளாதாரத்தை மேலும் முறைப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. டிஜிட்டல் இந்தியா பிரசாரத்தின் வெற்றிக் கதைகளில் UPI ஒன்றாகும். UPI பரிவர்த்தனைகளைக் கண்டறியும் திறனை மேம்படுத்தியுள்ளது, மேலும் சமீபகாலங்களில், வரி அதிகாரிகளுடன் UPI தரவு பகிர்வு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது GSTஇன் கீழ் பதிவு செய்யப்படாத பல நபர்களுக்கு அறிவிப்புகளைப் பெற வழிவகுத்தது. வரி அடிப்படையை விரிவுபடுத்துவது என்பது நல்ல இலக்கு என்றாலும், சிறிய விற்பனையாளர்களிடம் பெரும்பாலும் சிக்கலான ஜிஎஸ்டி விதிகளைக் கையாளும் அமைப்புகள் அல்லது அறிவு இல்லை என்பதும் உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
model imagemeta ai

இந்தப் பிரச்னை காரணமாக பல சிறு வணிகர்கள் UPI பணம் பெறுவதைத் தவிர்க்கின்றனர். இது ரொக்கமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்திற்கு எதிரானது. இதுபோன்ற ஜிஎஸ்டி அறிவிப்புகள் தொடர்ந்தால், பல நேர்மையான விற்பனையாளர்கள் டிஜிட்டல் கட்டணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு இருமுறை யோசிப்பார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

karnataka vegetable vendor from gets rs 29l gst tax
2025-26 மத்திய பட்ஜெட்|ஸ்மார்ட்போன்களுக்கான இறக்குமதி வரி To நகைகளுக்கான ஜிஎஸ்டி; எழும் கோரிக்கைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com