“மேற்கொண்டு படிக்க வேண்டும்.. ப்ளீஸ்” - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

கர்நாடகாவில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்தியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
marriage stopped
marriage stopped pt

சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா தாலுகாவை சேர்ந்த சந்தோஷூக்கும், சல்லகெரே தாலுகாவை சேர்ந்த யமுனாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து இம்மாதம் 7 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துள்ளது.

Marriage
Marriage File image

இந்நிலையில், 6 ஆம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மறுநாள் காலை திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர். சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில், மணமகன் சந்தோஷ் தாலிகட்ட நெருங்கி வந்தபோது, திடீரென திருமணம் செய்து கொள்ள மணமகள் யமுனா எதிர்ப்பு தெரிவித்தார்.

marriage stopped
#EXCLUSIVE | “18,000 பேருக்கும் சமர்ப்பிக்கிறேன்..” காவலர் தயாளன் EMOTIONAL பேட்டி

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினரும், உறவினர்களும் மணமகளை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த மணமகள், மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த விசாரித்தபோது, திருமண பேச்சின் தொடக்கத்தில் மணமகள் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு, அரசு கல்லூரியில் PG படிக்க அவருக்கு சீட் கிடைத்துள்ளது. இதனால், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் மணமகள் கூறியபோது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்தி மணமேடை வரை அவரை அழைத்து வந்துள்ளனர். இருப்பினும் இறுதியில் படிப்பு முக்கியம் என்று முடிவெடுத்த மணமகள், தாலி கட்டும் நேரத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com