\
Jantar Mantar: Delhi’s Hub for Democratic Protests
Jantar MantarAI Created

டெல்லியின் ஜந்தர் மந்தர்.. ஜனநாயகக் குரல்களின் களமாக உருவெடுத்தது எப்படி?

போராட்டங்களின் மறுபெயராகவே மாறிப்போன இந்த இடம், நாட்டின் அதிகார மையத்தைக் கேள்வி கேட்கும் களமாக உருவெடுத்த கதை சுவாரசியமானது.
Published on
Summary

டெல்லியின் ஜந்தர் மந்தர், இந்திய ஜனநாயகக் குரல்களின் முக்கிய மேடையாக உருவெடுத்த வரலாற்றை இந்த செய்தி விளக்குகிறது. 1990களுக்கு முன் போராட்டங்கள் நடந்த போட் கிளப் பகுதியிலிருந்து, பாதுகாப்பு சவால்கள் காரணமாக 1993இல் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தருக்கு மாற்றப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு அருகாமை, அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கம், நிர்பயா போராட்டம் போன்ற வரலாற்றுச் சம்பவங்கள் இதன் முக்கியத்துவத்தை உயர்த்தின.

சாமானிய மனிதனின் நீதிக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, தேசத்தையே உலுக்கும் மக்கள் இயக்கமாக இருந்தாலும் சரி.. இந்தியாவின் தலைநகரில் ஒலிக்கும் ஒவ்வொரு ஜனநாயகக் குரலுக்கும் புகலிடமாக இருப்பது ஜந்தர் மந்தர். இன்று போராட்டங்களின் மறுபெயராகவே மாறிப்போன இந்த இடம், நாட்டின் அதிகார மையத்தைக் கேள்வி கேட்கும் களமாக உருவெடுத்த கதை சுவாரசியமானது.

விவசாயிகள் முற்றுகை
விவசாயிகள் முற்றுகைPt web

1990களுக்கு முன்பு வரை நாட்டின் மிகப்பெரிய அரசியல் போராட்டங்கள் டெல்லி ராஜ்பாத் அருகிலுள்ள 'போட் கிளப்' பகுதியில்தான் நடைபெற்றன. ஆனால், 1988இல் விவசாயத் தலைவர் மகேந்திர சிங் திகாயித் தலைமையில் லட்சக்கணக்கான விவசாயிகள் போட் கிளப்பை முற்றுகையிட்டது, தலைநகரின் நிர்வாகப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில் 1993ஆம் ஆண்டு முதல் போராட்டக்காரர்களைக் காவல் துறை ஜந்தர் மந்தர் நோக்கித் திசைதிருப்பியது.

Jantar Mantar: Delhi’s Hub for Democratic Protests
தொகுதி மறுவரையறை மசோதா | 50% தொகுதிகள் அதிகரிப்பு.. தமிழகத்திற்குச் சாதகம்!

நாடாளுமன்றத்திலிருந்து 3 கி.மீ தொலைவுக்குள் அமைந்திருந்ததால், ஆட்சியாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க இதுவே சிறந்த இடமாகப் போராட்டக்காரர்களால் தேர்வு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அதிகாரபூர்வ அரசாணை எதுவுமின்றி, நடைமுறைரீதியாகவே இது போராட்டக் களமாக மாறியது. 2003இல் பிறப்பிக்கப்பட்ட காவல் உத்தரவு மூலம், 5,000 பேருக்குக் குறைவான கூட்டங்களுக்கு ஜந்தர் மந்தர் ஒதுக்கப்பட்டது.

அண்ணா ஹசாரே
அண்ணா ஹசாரேHindustan Times

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம், நிர்பயா நீதிப் போராட்டம் முதல் மாணவர் போராட்டங்கள் வரை பல வரலாற்றுப் போராட்டங்களுக்கு சாட்சியாக இது திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடி காரணங்களால் இப்போராட்டக் களத்தை ராம்லீலா மைதானத்திற்கு மாற்றலாமா என்ற விவாதங்கள் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்று தீவிரமடைந்துள்ளன.

Jantar Mantar: Delhi’s Hub for Democratic Protests
UPI-க்கு இனி கட்டணம் செலுத்தவேண்டும்.. SILENT-ஆக மசோதா நிறைவேற்றம்! இது பொதுமக்களுக்கு ஆபத்தா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com