நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்முகநூல்

அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கர் புகைப்படத்துடன் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
Published on

அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, இரு நாள் விவாதம் நடந்தது. அப்படி நேற்றைய தினம் நடந்த நிகழ்வின் முடிவில், மாநிலங்களவையில் அமித் ஷா உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், “இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்
"அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது" - அமித்ஷா வைத்த விமர்சனம்.. எகிறும் எதிர்ப்பு!

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் நேற்று முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் அம்பேத்கர் புகைப்படத்துடன் போராட்டமும் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கைகளில் அம்பேத்கர் படங்களை ஏந்தி நின்று “ஜெய்பீம்! ஜெய்பீம்” என முழக்கமிட்டனர். மேலும், “மத்திய அமைச்சர் அமித்ஷாவே! மன்னிப்பு கேளுங்கள்” எனவும் I.N.D.I.A. கூட்டணி எம்பிக்கள் கோஷமிட்டனர்.

இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com