“வலுவான கூட்டணி மட்டுமல்ல; ஆட்சி மாற்றத்துக்குறிய கூட்டணி” - ஆர்.எஸ்.பாரதி

“வலுவான கூட்டணி மட்டுமல்ல ஆட்சிமாற்றத்துக்குறிய கூட்டணி” இந்தியா கூட்டணி குறித்து ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே, இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இது குறித்து திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, “காஷ்மீர் முதல் குமரி வரை ஒற்றுமையை மீட்டுக் கொண்டு வரக்கூடிய சாத்தியம் இந்த கூட்டணியால் தென்படுகின்றன” என தெரிவித்துள்ளார். அவர் கூறிய முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com