இந்தியாவில் ஒரு விநாடிக்கு மொத்தம் 700 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நாட்டில் இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தியதில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.