IGNOU now offers MA in Bhagavad Gita
ignouignou

இந்திரா பல்கலையில் புதிய கல்வித் திட்டம்.. பகவத் கீதையில் முதுகலை படிப்பு அறிமுகம்!

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்துக்களின் புனித நூல் என அறியப்படும் பகவத் கீதையில் முதுகலைப் பட்டப்படிப்பை வழங்க இருக்கிறது. இதுகுறித்து ஆங்கில நாளேடான ’தி இந்து’ குறிப்பிட்டுள்ள கட்டுரையில், இதில் இரண்டு வருட பாடநெறி, வேதாந்தம், உபநிடதங்கள், அறிவியல் கண்ணோட்டங்கள் மற்றும் கலாசார நுண்ணறிவுகள் உள்ளிட்ட இந்திய அறிவு மரபுகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

IGNOU now offers MA in Bhagavad Gita
ignouignou

மேலும் பகவத் கீதையின் மூலம் மாணவர்கள் நெறிமுறை மதிப்புகள், தலைமைத்துவக் கொள்கைகள், மோதல் தீர்வு, சுற்றுச்சூழல் கவலைகள் மற்றும் சமூக-அரசியல் அம்சங்களை ஆராய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்கலை, MAVS எனப்படும் முதுகலை (வேத ஆய்வுகள்) திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டம் வேதங்கள், வேதாங்கங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள் மற்றும் வேத அறிவியல், கணிதம் மற்றும் கலை போன்ற பிற பாடங்கள் உட்பட வேத அறிவைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IGNOU now offers MA in Bhagavad Gita
அண்ணா பல்கலை பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகம் 

மேலும், வெள்ளம், பூகம்பம், சுனாமி அல்லது நிலச்சரிவுகள் என பல்வேறு இயற்கையின் பேரிடர்களை முறையாக சமாளிக்க உதவும் ஒரு துறையான பேரிடர் மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ படிப்பையும் பல்கலை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் மாணவர்கள் பேரிடர் தயார்நிலை மற்றும் எதிர்வினை, இடர் மதிப்பீடு, பேரிடர் தணிப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி பெற வழிவகை செய்கிறது. இது ஆறு மாத சான்றிதழ் டிப்ளோமா மற்றும் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை முதுகலை டிப்ளோமாவை வழங்குகிறது. 

IGNOU now offers MA in Bhagavad Gita
ignouignou

அடுத்து, வேளாண் துறையில், விவசாயச் செலவு மேலாண்மை மற்றும் வருமானத்தை அதிகப்படுத்துதல் குறித்து விவசாயச் சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வேளாண் செலவு மேலாண்மை டிப்ளமோ போன்ற சில சிறப்புப் படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்துடன் (ICMAI) இணைந்து, இந்திரா பல்கலை வேளாண் பள்ளியால் நடத்தப்பட இருக்கிறது. மேலும், வீட்டு அறிவியலில் இளங்கலை கலைப் பட்டப்படிப்பையும் தொடங்கியுள்ளது. இந்த திட்டம், பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்டம் மற்றும் கடன் கட்டமைப்பு மற்றும் புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வீட்டு அறிவியல் அல்லது சமூக அறிவியலில் உள்ள பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறுவதற்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என தி இந்து கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IGNOU now offers MA in Bhagavad Gita
ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com