Hyderabad fertility center
Hyderabad fertility centerFB

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று தருவதாக மோசடி.. கருத்தறித்தல் மையத்தில் 9 பேர் கைது!

ராஜஸ்தான் தம்பதி, DNA பரிசோதனை செய்தபோது, அது தங்கள் கரு முட்டை மற்றும் விந்தணுக்கள் மூலம் பெறப்பட்ட குழந்தை இல்லை என தெரியவந்துள்ளது.
Published on

ஹைதராபாத் கருத்தறித்தல் மையத்தில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுத் தருவதாக கூறி, 35லட்சம் மோசடி செய்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த தம்பதி, ஹைதராபாத்திலுள்ள கருத்தறித்தல் மையத்தை அணுகியுள்ளனர். அவர்களிடமிருந்து கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்களை சேகரித்த அந்த மையத்தினர், 35 லட்ச ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர். பிறகு, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக கூறி, தம்பதியினரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் சந்தேகமடைந்த ராஜஸ்தான் தம்பதி, டி.என்.ஏ பரிசோதனை செய்தபோது, அது தங்கள் கரு முட்டை மற்றும் விந்தணுக்கள் மூலம் பெறப்பட்ட குழந்தை இல்லை என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அத்தம்பதி அளித்த புகாரின் பேரில், அந்த கருத்தறித்தல் மையத்தின் உரிமையாளரான மருத்துவர் நர்மதா, அவரது மகன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நர்மதா பலரிடம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Hyderabad fertility center
IVF முறையில் மரபணு சோதனையின் முக்கிய பங்கு என்ன தெரியுமா?

போலீசாரின் விசாரணையில், ”புகார் அளித்தவர் 2024 ஆம் ஆண்டில் தனது மனைவிக்கு இரண்டு கருச்சிதைவுகள் ஏற்பட்டதால் நர்மதாவை அணுகினார். மேலும் நர்மதாவுக்கு ஐவிஎஃப் முறை வேண்டாம் என்றும் வாடகைதாய் மூலமாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் வாடகை தாய் என்று ஒரு பெண்ணை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மரபணு சோதனை
மரபணு சோதனை முகநூல்

பின்னர் ஜூன் மாதன் 2025 இல், தம்பதியினர் விசாகப்பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். மேலும் குழந்தை சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால் அந்த தம்பதி டிஎன்ஏ மூலமாக பரிசோதனை செய்து பார்த்த போது அது மோசடி என்று தெரியவந்துள்ளதாக” போலீசார் தெரிவித்தனர்.

மேலும், “செகந்திராபாத், கொண்டாபூர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினத்தில் நான்கு கிளைகளில் இருந்து செயல்பட்டு வரும் இந்த கருவுறுதல் மையத்தின் உரிமையாளர், 64 வயதான அதாலூரி நர்மதா ஆவார்.. இந்த வழக்கில் இவர்தான் முக்கியமான குற்றவாளி என்று போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக, மருத்துவ அதிகாரிகள் அவரது ஹைதராபாத் மையத்தின் உரிமத்தை ரத்து செய்திருந்தனர்,

நம்ரதா 1995 இல் தனது மருத்துவ பயிற்சியைத் தொடங்கினார் மற்றும் 1998 முதல் கருவுறுதல் மற்றும் ஐவிஎஃப் சேவைகளை செய்ய தொடங்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் அவரது மகனும் அடங்குவர், அவர், முரண்பாடுகள் எழுந்தபோது தம்பதிகளை அச்சுறுத்தி, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அவர்களை அச்சுறுத்தினார் என்று போலீசார் தெரிவித்தனர். மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் கல்யாணி அத்சயம்மா, 40, மேலாளர்; ஜி. சென்னா ராவ், 37, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் கருவியலாளர்; 41 வயதான சதானந்தம், காந்தி மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர் மற்றும் ஹைதராபாத்தில் வாடகைத் தாய் ஜோடியை அடையாளம் காண உதவிய சந்தோஷி. இரண்டு மாத சிறுவனின் உயிரியல் பெற்றோர், அலி ஆதிக், 38, மற்றும் அசாமைச் சேர்ந்த நஸ்ரீன் பேகம் (25) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Hyderabad fertility center
சென்னை | குழந்தைகளிடம் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

வாடகைத் தாய் சட்டத்தின் கீழ் குற்றவியல் சதி, மோசடி, மற்றும் விதி மீறல்களுக்காக பாரதிய நியா சன்ஹிதா (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், மோசடி கருவுறுதல் சேவைகளுக்கு பலியாகாமல் இருக்கவும் காவல் துணை ஆணையர் பொதுமக்களை எச்சரித்தார். இந்திய சட்டங்களின் கீழ் வாடகைத் தாய் தடை செய்யப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற சிகிச்சைகள் செய்யும் போது சட்டப்படி தெரிவிக்கப்பட வேண்டும் என்று உறுதியளிக்கும் கிளினிக்குகளை அணுக வேண்டும் என தெரிவித்துள்ளார்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com