ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது: சித்தராமைய்யா

ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது: சித்தராமைய்யா

ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது: சித்தராமைய்யா
Published on

ஹிந்தி தேசிய மொழியல்ல என்றும் ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். 

பிராந்திய மொழிகளை வலியுறுத்துவது, இந்தியாவின் ஒற்றுமைக்கு தடையாக இருக்காது என்றும் சித்தராமைய்யா கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் ஹிந்தியும் ஒன்று என்று கூறிய சித்தராமைய்யா, ஹிந்தி மொழியை மக்களிடம் திணிக்கக்கூடாது என்றும், விருப்பப்பட்டவர்கள் அந்த மொழியை கற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிற மாநில வங்கி ஊழியர்கள் 6மாதத்தில் கன்னடம் கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என கர்நாடக அரசு தெரிவித்தது. ஹிந்தி மொழியை பரப்புவதற்காக எல்லா வங்கி கிளைகளிலும் எப்படி ஹிந்தி மொழி பிரிவுகள் திறக்கப்பட்டதோ அதேபோல் கன்னட மொழிக்கான பிரிவுகளை வங்கிகள் திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com