’என்னை எதுவும் காட்டமாகச் சொல்ல வைக்காதீர்கள்’ - பார் கவுன்சில் தலைவரை எச்சரித்த தலைமை நீதிபதி!

தேர்தல் பத்திரம் தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவரை, தலைமை நீதிபதி சந்திரசூட், இன்று எச்சரித்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர்நீதிமன்றம்ட்விட்டர்

தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் இன்னும் நடைபெற்று வருகிறது.

இன்றுகூட, ‘எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை’ எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும், குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் ‘எந்த தகவலும் விடுபடவில்லை’ என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வழக்கு குறித்து இன்று நடைபெற்ற விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசுத் தலைவருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார். அதற்குக் கடுமையாகப் பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “நீங்கள் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர். என்னுடைய சுயமரியாதையை வலியுறுத்தி நீங்கள் தேவை இல்லாமல் இப்போது கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தும் விளம்பரம் தொடர்பான விஷயங்கள். நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. என்னை எதுவும் காட்டமாகச் சொல்ல வைக்காதீர்கள்” என எச்சரித்தார்.

இதையும் படிக்க: வர்ராங்க.. கொட்டு வாங்கறாங்க.. போறாங்க.. ரீப்பீட்டு! எஸ்.பி.ஐ Vs உச்சநீதிமன்றம்! என்னதான் நடக்குது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com