மிசோரம், சத்தீஸ்கர் தேர்தல்: பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் கொடுத்த தகவல்!

மிசோரம் மாநிலத்திற்கான சட்டபேரவைத் தேர்தலில் 77 விழுக்காடு வாக்குகளும், சத்தீஸ்கர் மாநிலத்திற்கான முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 70 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
voting
votingpt desk

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், எந்த பிரச்னையும் இன்றி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் வருகை தந்து ஜனநாயக கடமையாற்றினர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிசோரம் மாநிலத்தில் 77.04 % வாக்குகள் பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

election commission
election commissiontwitter

இதேபோல், 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல்கள் அதிகம் உள்ள தொகுதிகளான 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற 10 தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மொத்தம் 70.87 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

voting
சத்தீஸ்கர்: வாக்குப்பதிவிற்கு நடுவே குண்டுவெடித்ததில் துணை ராணுவப்படை வீரர் காயம்!

வாக்குப்பதிவுக்கு இடையே சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சிறப்புப் படையினர் 3 பேர் காயமடைந்தனர். சத்தீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளில் வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com