மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், கைதிகளின் விடுதலையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறதா, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள சிறைகளின் விவரங்கள் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்துள்ள பதிலில், சிறை நிர்வாகம் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விவரங்கள் இங்கே பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.