மகாராஷ்டிரா போலீஸ் என்கவுன்டரில் முக்கிய நக்சல் தலைவர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா போலீஸ் என்கவுன்டரில் முக்கிய நக்சல் தலைவர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா போலீஸ் என்கவுன்டரில் முக்கிய நக்சல் தலைவர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட 26 நக்சலைட்டுகளில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 'சி-60' என்ற சிறப்பு கமாண்டோ படையினர் என்கவுன்டரொன்றை நடத்தியிருந்தனர். அதில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 6 பேர் என மொத்தம் 26 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மிக முக்கியமான எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடைய நக்சல் அமைப்பின் தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிலிந்த் டெல்தும்டே தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை கூறியுள்ளது. பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆனந்த் டெல்தும்டே-வின் சகோதரர் மிலிந்த் டெல்தும்டே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com