‘நடிகராக மரியாதை இருக்கு... ஆனால், அவரின் இந்தப் பேச்சு...’ - ரஜினிக்கு ஆந்திர அமைச்சர் ரோஜா கண்டனம்

நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு குறித்த அவரின் பேச்சு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும், நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.
ரோஜா, ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு
ரோஜா, ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுPT, @rajinikanth twitter

நடிகரும், ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதலமைச்சருமான என்.டி. ராமராவின் நூறாவது பிறந்த நாள் விழா விஜயவாடாவில் நேற்று (ஏப்ரல் 28) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா, நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரோஜா, ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு
முதல் நாள் வசூலில் ‘வாரிசு’, ‘துணிவு’ படங்களை முந்தியதா ‘பொன்னியின் செல்வன் 2’ - வெளியான நிலவரம்!

நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி; தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு பார்வை காரணமாக. ஹைதராபாத் நகரம், நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என்றுக் கூறினார்.

இந்த நிலையில் பாபட்டலாவில் இன்று (ஏப்ரல் 29) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, ரஜினிகாந்த்தின் நேற்றைய பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், அவர் பேசுகையில், “கடந்த 2003-வது ஆண்டுடன் கிட்டதட்ட தெலங்கானாவில் (ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம்) சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதன்பின் இப்போது இருபது ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது, ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.

அமைச்சர் ரோஜா
அமைச்சர் ரோஜாPT

சுமார் 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு, அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நேற்றைய தன்னுடைய உரையில் விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது, என்.டி.ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

என்.டி.ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவருடைய ஆசி இவருக்கு எப்படி கிடைக்கும். தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்.டி.ராமராவ், என்னுடைய மருமகன் ஒரு திருடன். அவனை யாரும் நம்பாதீர்கள் என்றுக் கூறினார்.

ரஜினிகாந்திற்கு இது தெரியவில்லை என்றால், என்.டி. ராமராவ் பேச்சு அடங்கிய சி.டி.யை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதனைப் போட்டு என்.டி.ராமராவ், சந்திரபாபு நாயுடு பற்றிக் கூறியதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

ரோஜா, ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு
’கஜினி’ பட நடிகை தற்கொலை வழக்கில் விடுதலையான காதலர்! 10 ஆண்டு வழக்கில் வெளியான தீர்ப்பு

மேலும், நடிகராக ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு குறித்த அவரின் பேச்சு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனவும், நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com