ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு  ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது குறித்‌த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, தயாநிதி மாறன் உள்ளிட்டவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை பிப்ரவரி இரண்டாம் ‌தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிப்பதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்க அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு அழுத்தம் தரப்பட்டப்பட்டதாகவும், விற்பனையின் பலனாக சன் குழும நிறுவனங்களில் மேக்சிஸ் நிறுவனம் அதிக முதலீடு செய்ததாகவும் வழக்கு நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com