இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை: உ.பி அமைச்சர் உபேந்திரா திவாரி

இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை: உ.பி அமைச்சர் உபேந்திரா திவாரி
இந்தியாவில் 95% மக்களுக்கு பெட்ரோல் தேவைப்படுவதில்லை: உ.பி அமைச்சர்  உபேந்திரா திவாரி

”நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை” என உத்தரபிரதேச மாநில அமைச்சர் உபேந்திரா திவாரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் வேலையிழப்பு, ஊதிய இழப்பு என பல இடர்பாடுகளை சந்தித்த மக்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழலில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உத்தரபிரதேச அமைச்சர் உபேந்திரா திவாரி, நாட்டில் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர், அவர்களுக்குதான் பெட்ரோல் தேவைப்படுகிறது என்றும் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்லை என்றும் கூறியுள்ளார். 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தனிநபர் வருமான அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com