பீகாரில் பதற்றம்
பீகாரில் பதற்றம்முகநூல்

மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு... பீகாரில் பதற்றம்!

30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் கொண்ட குற்றாவளி நபர் ஒருவர், சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்தநிலையில், அவரை திட்டமிட்டு எதிர் கும்பல் மருத்துவமனையிலேயே சரமாறியாக சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பீகாரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்த படுகொலைகள் நடந்து வருகிறது. இது ஆளும் நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியு-பாஜக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை மீண்டும் ஒரு படுகொலை சம்பவம் அரங்கேறி பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு சம்பவத்திலும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது 12க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும் 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் உள்ளன. இவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கிரிமினல் சிறையில் இருந்து பரோலில் வந்தநிலையில், பாட்னா பராஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடுத்தடுத்து மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளது. ஒவ்வொரு அறையின் கதவையும் திறந்து பார்த்த அந்த கும்பல், சிகிச்சைப்பெற்று வந்த சந்தன் மிஸ்ராவின் அறைக்குள் நுழைந்தவுடன் சந்தன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கும்​பல், சந்​தன் மிஸ்​ஸாவுக்கு எதி​ராக செயல்​படும் சந்​தன் செரு தலை​மையி​லான ரவுடிகள் என போலீ​ஸார் அடை​யாளம் கண்​டு ஒருவரை கைது செய்தனர். மற்றவர்​களை பிடிக்​கும் முயற்சி​யில் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

பீகார் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதத்திற்கு மத்தியில்,இது குறித்து பீகார் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) வினய் குமார் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” குற்றங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2004 ஆம் ஆண்டு ஆண்டு குற்ற விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தினமும் தோராயமாக நான்கு படுகொலைகள் நடந்தன. அதன் பின்னர், கொலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, சுமார் 2,700 கொலைகள் பதிவாகியுள்ளன, இது 2004 உடன் ஒப்பிடும்போது சுமார் 1,300 குறைவு" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஷ்ட்​ரிய ஜனதா தள தலை​வர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்​டி​யில், ” பிஹாரில் யாருக்​கும், எங்​கும் பாது​காப்பு இல்லை. அரசு ஆதர​வுடன் செயல்​படும் குற்​ற​வாளி​கள், மருத்​து​வ​மனை​யின் ஐசியு வார்​டுக்​குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்​றுள்​ளனர். 2005-ம் ஆண்​டுக்கு முன்பு இது போன்ற சம்​பவங்​கள் பிகாரில் நடை​பெற​வில்​லை” என்​றார்.

 பீகாரில் பதற்றம்
ராஜீவ் காந்தியின் கடைசி பேட்டி.. நினைவுகூர்ந்த பத்திரிகையாளர்!

கடந்த சில வாரங்களாக பல கொலை வழக்குகளுக்கு தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கும் பீகார் , தற்போது இந்த படுகொலை சம்பவத்தின்மூலம் அதை நிருப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com