மும்பை
மும்பைமுகநூல்

கவனம் தேவை | மாவு அரைத்தபோது கிரைண்டரில் சிக்கிய இளைஞர்... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

மும்பையில் மாவு அரைக்கும் கிரைண்டரில் சிக்கி 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Published on

நொடி பொழுதில் சிதறிய கவனத்தால் இப்படியெல்லாம் ஒரு மனிதனுக்கு இறப்பு வருமா? என்று சிந்திக்க முடியாத அளவுக்கு தினந்தோறும் பல்வேறு விபத்துகள் நம்மை சுற்றி அரங்கேறி வருகின்றன. அப்படித்தான் மும்பையில் நடந்தேறிய சம்பவமும்.

மும்பையின் வொர்லி ஆதர்ஷ் நகரில் ஒரு சீன உணவகம் இயங்கிவருகிறது. இங்கு ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான சூரஜ் நாராயண் யாதவ் என்ற இளைஞர் பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல, சனிக்கிழமை அன்று, மஞ்சூரியன் மற்றும் சைனீஸ் பெல் உணவை தயாரிப்பதற்காக மாவு அரைப்பதற்கு கிரைண்டரை இயக்கியுள்ளார்.

மும்பை
தஞ்சை: சொகுசு காரில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 103 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது

இதற்காக, தனது இடுப்பளவில் உள்ள கிரைண்டரில் மாவை எடுத்து விடுவதற்காக கையை விட்டு வேலை செய்து வந்துள்ளார் சூரஜ். அப்போது, திடீரென, சூரஜின் சட்டை கிரைண்டரின் உள்ளே மாட்டிக்கொள்ள சட்டென கிரைண்டருக்குள் இழுக்கப்பட்ட அவர், அடுத்த நொடியே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுத்தொடர்பான வீடியோக்கள் வெளியாகி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், அங்குள்ள சிசிடிவி காட்சியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

மும்பை
"அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது" - அமித்ஷா வைத்த விமர்சனம்.. எகிறும் எதிர்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com