\
hyderabad tifr study flags harmful effects of sugar sweetened beverages on humans
எலிஎக்ஸ் தளம்

எலிகளுக்கு சர்க்கரை கலந்த பானங்கள்.. முடிவில் வெளியான தகவல்!

சர்க்கரை கலந்த பானங்களை உட்கொள்வதால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Published on

மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஆராய்ச்சியாளர்கள் சில எலிகள் மூலம் சர்க்கரை நோய் குறித்து ஆராய்ச்சி செய்தனர். அப்போது சில எலிகளுக்கு ஒருநாளைக்கு 4 முதல் 5 தடவை 100 மில்லி லிட்டர் அளவுள்ள சர்க்கரை கலந்த இனிப்பான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டது.

hyderabad tifr study flags harmful effects of sugar sweetened beverages on humans
எலிஎக்ஸ் தளம்

2 ஆண்டுகள் நடந்த ஆராய்ச்சி முடிவில் அனைத்து எலிகளுக்கும் சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் ஒருநாளைக்கு தினமும் 2 வேளை இனிப்பான டீ காபி குடிப்பவர்களுக்கு டைப்-2 சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆய்வு மூலம் டீ, காபியில் உள்ள சுக்ரோஸ் என்ற அமிலம் கல்லீரல் தசைகள் மற்றும் சிறுகுடல்களில் கடுமையான விளைவுகள் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

hyderabad tifr study flags harmful effects of sugar sweetened beverages on humans
உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயா?.. ஆறுதல் அளிக்கும் செய்தி இதோ!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com