\
"கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்"- மருத்துவர் கமலா செல்வராஜ்

"கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்"- மருத்துவர் கமலா செல்வராஜ்

"கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்"- மருத்துவர் கமலா செல்வராஜ்
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் புதியதாக ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் பிரபல மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

விழாவின்போது பேசிய அவர்,
’’அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்வது அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில்
மாஸ்க் அணிவது, நமக்கு இதயம் துடிப்பது போல் நமது உயிரை பாதுகாக்கும் ஓர் கருவியாகும்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் கர்ப்பிணிகள் கொரோனாத் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதற்கு அதிகளவில் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com