cancer cases increasing in india
புற்றுநோய்pt web

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு.. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், சீனாவில் புற்றுநோய் பாதிப்பு குறைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Published on

புற்றுநோய் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது புற்றீசல்போல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதனை உறுதிபடுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை இந்தியா உட்பட உலக நாடுகளை நடுங்கவைத்துள்ளது. இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்..

உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75 விழுக்காடு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் ஆய்வறிக்கை. 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 கோடியே 5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்றும், ஒரு கோடியே 86 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கக் கூடும் என்றும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வின்படி, உலகிலேயே புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1990 முதல் 2023 வரை இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26.4% அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் சீனாவில் பாதிப்பு 18.5% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

cancer cases increasing in india
புற்றுநோய்pt web

இந்தியாவில் 1990-இல் லட்சத்தில் 84 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-இல் லட்சத்தில் 107 பேராக உயர்ந்துள்ளது. அதேபோல், இறப்பு விகிதமும் அதிகரித்து, 2023-இல் 12.1 லட்சம் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கைமுறை காரணிகள், உலகளவில் 40%க்கும் அதிகமான புற்றுநோய் இறப்புகளுக்குக் காரணமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

cancer cases increasing in india
மூக்கில் உருவான தோல் புற்றுநோய்.. ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கம்!

மேலும், உலக சுகாதாரத்தில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கும், செயல்பாட்டிற்கும் குறைவான முன்னுரிமையே வழங்கப்படுவதாகவும், பல நாடுகளில் சவாலை எதிர்கொள்ளப் போதுமான நிதி இல்லை எனவும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் லிசா ஃபோர்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

cancer cases increasing in india
புற்றுநோய்எக்ஸ் தளம்

எனவே, வளங்கள் குறைவாக உள்ள நாடுகளில் புற்றுநோய் சுமையின் அதிகரிப்பைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் லிசா ஃபோர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

cancer cases increasing in india
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? அதனை சரி செய்ய முடியுமா? விளக்குகிறார் புற்றுநோயியல் மருத்துவர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com