ரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா ? என்ன குழந்தை பிறக்கும் ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

ரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா ? என்ன குழந்தை பிறக்கும் ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !
ரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா ? என்ன குழந்தை பிறக்கும் ? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

இந்திய அணிக்கு இது போதாத காலம்தான். ஆம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி
இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி
விளையாடிய விதம் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட இந்திய
அணி தோற்றது கூட பரவாயில்லை ஆனால் அதில் போராட்டக் குணமே இல்லையே என்று தங்களது வருத்தத்தை பதிவு
செய்திருந்தனர்.

இந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்த எதிர்ப்பை சமாளிக்க ஃபேஸ்புக்கில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் அதில் "சில
நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம். மற்ற சில நேரங்களில் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் எப்போது எங்களை கைவிட்டதில்லை.
நாங்களும் உங்களை எப்போது கைவிடமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அது இப்போதும்.. எப்போதும்” என்று தெரிவித்திருந்தார்.

இப்போது ரசிகர்களின் கோபம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது திரும்பியுள்ளது. இதில் மிக முக்கியமாக ரவி
சாஸ்திரியின் "தொப்பை" கேலிக்குறியதாகி இருக்கிறது. ரவி சாஸ்திரி லார்ட்ஸ் மைதானத்தில் பிட்சை பார்வையிட்டார். அப்போது
அவர் தொப்பை பெரிதாக தெரிந்தது. இதை புகைப்படம் எடுத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களோடு ரவி சாஸ்திரியை கலாய்க்க
தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர் "இங்கிலாந்தில் கோலி வெற்றியை டெலிவரி செய்கிறாரோ இல்லையோ, நிச்சயம் ரவி சாஸ்திரி
டெலிவரி செய்வார்" என கேலி செய்ய தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி  பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இதில் முதலில்
பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, உணவு இடைவேளையின் வைர முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது
அப்போது, ஓய்வு அறையில் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி போட்டியைக் கூட கவனிக்காமல் தூங்கி விழுந்தார். இதை வைத்து
கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்தனர்.

இதெல்லாம் ரவி சாஸ்திரியின் ஜாலி பக்கமாக இருக்க. லார்ட்ஸ் தோல்விக்கு பின்பு ரவி சாஸ்திரியின் பயற்சியாளர் பதவி சீரியஸாக
மாறத் தொடங்கியுள்ளது. ரவி சாஸ்திரியை பதிவியில் இருந்து நீக்கிவிட்டு, இந்திய u19 பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டை
நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் "இங்கிலாந்துஅணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கூட இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தவில்லை என்று சாடியுள்ளார்.வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமலும், போராடாமலும் தோற்றது அதிருப்திக்குள்ளாக்கியதாகவும்.இது குறித்து ரவி சாஸ்திரி ஒவ்வொருவருக்கும் பதில் கூறியே ஆக வேண்டும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com