பங்களாதேஷ்  நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைதுpt desk

திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது

பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 6 பேரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ் குமார்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் உரிய ஆவனங்கள் இன்றி பங்களாதேஷை சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பங்களாதேஷ்  நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைதுpt desk

விசாரணையில் அவர்கள், பங்களாதேஷை சேர்ந்த ரவ்ஹான் அலி (36), ஹரிருள் இஸ்லாம் (26), ரஹ்மான் (20), சோஹில் இஸ்லாமி (20), சபிபுல் இஸ்லாம் (40), அப்துல் ஹோசன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து கட்டடம் மற்றும் பனியன் நிறுவனங்களில் பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

பங்களாதேஷ்  நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது
தேனி | ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை... 14 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com