துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவேதாவின் கணவர் கணேசன் மீது, கோவை மாவட்டம் குனியமுத்தூர் மற்றும் போத்தனூர் காவல் நிலையங்களில் 4 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் குனியமுத்தூரில் மூதாட்டியிடம் கொள்ளையடித்த புகாரில், கணேசனை கைது செய்ய காவல்துறையினர் வந்தனர். அப்போது, சுவேதா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜய் உட்பட 17 பேர் குனியமுத்தூர் காவல்துறையினரை தாக்கி கைவிலங்கை வெல்டிங் பட்டறைக்கு கொண்டு சென்று வெட்டி எடுத்துவிட்டு தப்பிக்க வைத்தனர்.