ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை

ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை

ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இளைஞர் ஒருவர், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் காதல் கலப்பு திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு ஆணவக்கொலை நிகழ்ந்துள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த 22 வயதான நீரஜ் பன்வார் - சஞ்சனா ஜோடி காதலித்து வந்த நிலையில், சஞ்சனாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். அந்த தம்பதிக்கு 3 மாதக் குழந்தை இருக்கும் நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நீரஜ் பன்வாரை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த 4 பேர், சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த நீரஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீரஜின் மரணத்திற்கு தமது சகோதரரே காரணம் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் நீரஜின் மனைவி சஞ்சனா புகார் அளித்துள்ளார். இதனிடையே, நீதி கேட்டு பேகம் பஜார் பகுதியில் உறவினர்கள், வணிகர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com