செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் கைதுpt desk

மணப்பாறை | ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

மணப்பாறையில் மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்த இரு டிப்டாப் பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்.
Published on

செய்தியாளர்: எஸ்.காதர் மொய்தீன்,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள் (70). இவர் இன்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர்.

chain snatched
chain snatchedpt desk

இதைக் கண்ட சக பெண்கள் சத்தமிடவே இரு பெண்களும் நைசாக தப்ப முயன்றுள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச ;செல்ல முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது
மதுரை | தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைது

துரிதமாக செயல்பட்டு இரு பெண்களையும் மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com