தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைது
தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைதுpt desk

மதுரை | தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைது

மதுரையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் ஆறு பேரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரையில் தொழிலதிபர் சுந்தர் என்பவர் கடந்த 14-ஆம் தேதி கடத்தப்பட்டார், இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக பலரை போலீசார் தேடி வருகின்றனர். தொழிலதிபர் சுந்தரத்திற்கும் மரியராஜ{க்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைது
திண்டுக்கல்|குழந்தைக்கு சூடு வைத்த அங்கன்வாடி பணியாளர்!

மரியராஜ் காவல்துறையிடம் எந்த தகவலையும் முழுமையாக கூறவில்லை, அவர் வாய் திறந்து பேசும் பட்சத்திலேயே இந்த கடத்தல் வழக்கில் முழுமையான விவரங்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com