ஓசியில் ஜிலேபி தராததால் ஆத்திரம்.. குடிபோதையில் சிப்ஸ் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் வீ.இ ரோட்டில் செயல்பட்டு வரும் சிப்ஸ் கடைக்குச் சென்ற போதை ஆசாமிகள், ஓசியில் ஜிலேபி கொடுக்க மறுத்த கடையில் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குடிபோதையில் தாக்குதல்
குடிபோதையில் தாக்குதல்புதியதலைமுறை

தூத்துக்குடி வீ.இ ரோட்டில் நாகர்கோவிலை சேர்ந்த முருகன் என்பவர், ‘ஸ்ரீ சிந்து’ என்ற பெயரில் சிப்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் தூத்துக்குடி அருகே உள்ள பழைய காயல் கிராமத்தை சேர்ந்த குமார் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடை அருகே அரசு மதுபான கடை செயல்பட்டு வருவதால், மது அருந்திவிட்டு வரும் நபர்கள், சிப்ஸ் கடையில் பணம் கொடுக்காமல் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் சிப்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை கேட்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல மது அருந்திவிட்டு வெளியே வந்த 4 பேர் கொண்ட கும்பல், சிப்ஸ் கடையில் இருந்த ஊழியர் முருகனிடம் பணம் கொடுக்காமல் ஜிலேபி கேட்டுள்ளனர். அதற்கு குமாரோ, ‘பணம் இல்லாமல் ஜிலேபி கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் உரிமையாளர் திட்டுவார்’ என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போதையில் இருந்த நான்கு பேரும், குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். கடையை விட்டு வெளியே வந்தால் அடித்து துவைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

குடிபோதையில் தாக்குதல்
Wow..! 2 வயதிலேயே 10 சாதனைகளை தன்வசமாக்கிய கோவை சிறுவன்!

இதைத்தொடர்ந்து குமாரும், ‘எதற்காக என்னை திட்டினீர்கள்’ என்று கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போதையில் இருந்த நால்வரில் 2 பேர் கடைக்குள் புகுந்து ஊழியர் குமாரை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே, அந்த பகுதியில் இருந்த வியாபாரிகள் சிலர் உடனடியாக வந்து ஊழியர் குமாரை மதுபோதையில் இருந்த நபர்களிடம் இருந்து காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த குமார், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குமார் மற்றும் ஐக்கிய வியாபாரிகள் சங்கம் ஆகியோர் தென்பாகம் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய மது போதை கும்பலை கைது செய்ய கோரி புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குடிபோதையில் தாக்குதல்
2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்.. திசை மாறிச் சென்ற விமானம்.. பதறிய அதிகாரிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com