செங்கல்பட்டு: திருமண அழைப்பிதழ் வைப்பதாக கூறி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

செங்கல்பட்டு: திருமண அழைப்பிதழ் வைப்பதாக கூறி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை
செங்கல்பட்டு: திருமண அழைப்பிதழ் வைப்பதாக கூறி கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

திருமண அழைப்பிதழ் வைப்பதாகக் கூறி, வீட்டில் இருந்தவரை கட்டிப் போட்டு 7 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ளது.

அகரம் தென் பகுதியில் வசிக்கும் ரவி என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத பெண் உள்பட இரண்டு பேர் உறவினர் எனக் கூறி சென்றுள்ளனர். ரவியும் அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகள் புஷ்பலதா அங்கு இருந்துள்ளார். திருமண பத்திரிகை வைப்பதாக கூறி சென்ற நபர்கள், புஷ்பலதாவை கத்தியை காட்டி மிரட்டி அவரை கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 7 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்கு பிறகு, கட்டை அவிழ்த்து வெளியே வந்த புஷ்பலதா நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் சேலையூர் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 16 நாட்கள் வீட்டை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com